இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயின் அலி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலி (வயது 34) சர்வதேச டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். சிறந்த ஆல்ரவுண்டரான மொயின் அலி இங்கிலாந்து அணிக்காக 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2,914 ரன்கள் மற்றும் 195 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
தற்போது ஐபிஎல்லில் தோனி தலைமையிலான சென்னை அணிக்காக விளையாடி வரம் மொயின் அலி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையடுவார் என்பது குறிப்பித்தக்கது. 2016ஆம் ஆண்டில் அவர் நான்கு டெஸ்ட் சதங்களை அடித்த போது, அவர் ஒரு சிறந்த வீரராக திகழ்ந்தார்.
2017 ஆம் ஆண்டில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் 25 விக்கட்டுகளும், 2018-19 ஆம் வருடம் நடந்த இலங்கை மற்றும் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான 6 டெஸ்ட் போட்டிகளில் 32 விக்கட்டுகளும் வீழ்த்தி உள்ளார்.
தனது இரண்டாவது டெஸ்டில் இலங்கைக்கு எதிராக 108 ரன்கள் எடுத்த அந்த இன்னிங்ஸ் அவருக்கு மனா உறுதியை அளித்தது. இதனால் அவர் டெஸ்ட் போட்டிகளில் பல சாதனைகள் படைக்க உதவியது. ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் மூன்றாவது சிறந்த ஆல் ரவுண்டராக உள்ளார்.
இந்த நிலையில், இங்கிலாந்து தலைமை பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் மற்றும் இங்கிலாந்தின் டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட் ஆகியோருக்கு தான் சர்வதேச டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மொயின் அலி தகவல் தெரிவித்துள்ளார்.
Ghilli Re Release: தளபதி விஜய்யிடம் கில்லி திரைப்பட விநியோகஸ்தர் வைத்த கோரிக்கையை ஏற்றதால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ள நிலையில், அடுத்ததாக நடிக்கும்…
Kotak Mahindra Bank : கோடாக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் 10 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. இந்தியாவில் முதன் முதலாக ஸீரோ (0.00) பேலன்ஸ் வங்கி கணக்கை…
Gold Price: ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று அதிகரித்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும்…
Nainar Nagendran: தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். மக்களவை தேர்தல் காரணமாக கடந்த 6ம்…
Congress : உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக உள்ள அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம்…
Indian Items: 527 இந்தியப் பொருட்களில் புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனங்கள் இருப்பதை ஐரோப்பிய ஒன்றியம் கண்டறிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் இந்திய தயாரிப்பு…