சிம்புவின் மாநாடு படத்தில் இணைந்த பிரபல நடிகர்!

சிம்பு தற்போது நடித்து வரும் மாநாடு படத்தில் பிரபல நடிகர் வாகை சந்திரசேகர் அவர்கள் இணைந்துள்ளதாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் வெங்கட் பிரபு அவர்கள் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் புதிய திரைப்படம் தான் மாநாடு. இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு இடைநிறுத்தப்பட்டது. அதன்பின்பு சுசீந்திரனின் இயக்கத்தில் ஈஸ்வரன் எனும் படத்தில் நடித்து முடித்துள்ள சிம்பு, தற்போது மீண்டும் மாநாடு படப்பிடிப்பில் கலந்து கொண்டு உள்ளார். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அதன் பின் புயல் மற்றும் சூறாவளி ஏற்பட்டதால் மீண்டும் படப்பிடிப்பு தாமதம் ஆன நிலையில், புயலுக்குப் பின் தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளது. எனவே, மீண்டும் படப்பிடிப்பை துவங்கி உள்ளனர். இந்த மாநாடு படத்தில் பாரதிராஜா நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், அவர் விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து சிம்புவின் மாநாடு படத்தில் நடிகர் வாகை சந்திரசேகர் அவர்கள் இணைந்துள்ளதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் தெரிவித்துள்ளார்.

Rebekal

Recent Posts

ஒரு பாடலுக்கு, பாடலாசிரியரும் உரிமை கேட்டால் என்னவாகும்? இளையராஜா வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து.!

Ilayaraja: இசையமைப்பாளர் தொடர்ந்த வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. எக்கோ என்ற தனியார் இசைப்பதிவு நிறுவனத்துக்கும், ஏஸ் மியூசிக் நிறுவனத்துக்கும் இடையே, திரைப்படப் பாடல்கள் தொடர்பான…

27 mins ago

வெற்றிக்கு அருகில் வந்து தோல்வி அடைவது வேதனை அளிக்கிறது… சுப்மன் கில்!

IPL 2024: டெல்லி அணிக்கு எதிரான தோல்வி குறித்து குஜராத் கேப்டன் சுப்மன் கில் வேதனை தெரிவித்தார். நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.…

39 mins ago

கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளுக்கு நாளை தேர்தல்.!

Phase 2 Election: கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் நாளை தேர்தல் நடைபெறுகிறது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று…

2 hours ago

வெள்ளத்தில் மூழ்கிய கென்யா..பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு.!

Kenya floods: கென்யாவின் பல பகுதிகளில் வெள்ளம் அடித்துச் சென்றதில் பலி எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவில் பெய்த கனமழை காரணமாக…

2 hours ago

ரன் இயந்திரத்தை கட்டுப்படுத்துமா பெங்களூரு ? ஹைத்ராபாத்துடன் இன்று பலப்பரீட்சை!!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதராபாத் அணியும், பெங்களுரு அணியும் மோதுகிறது. இந்த ஆண்டில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் 41-வது போட்டியாக…

3 hours ago

பள்ளிகள் திறப்பு தேதியை அறிவித்த முதல் மாவட்டம்.! எங்கு தெரியுமா?

School Reopen: ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் என திருவள்ளூர் முதன்மைக் கல்வி அலுவலர் கூறிஉள்ளார். 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முன்னதாக…

3 hours ago