தையல்காரனுடன் கள்ளக்காதல் – கொலை செய்யப்பட்ட ஆசிரியை!

கணவனுக்கு மீறி தனது அண்டை வீட்டுக்காரர் தையல்காரர் உடன் கள்ள தொடர்பில் இருந்த ஆசிரியை ஒருவர் லாட்ஜில் இருந்தபொழுது கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரில் வசித்து வரக்கூடிய சஞ்சீவி பாட்டில் கமலா எனும் அங்கன்வாடி ஆசிரியராக பணி புரியக்கூடிய பெண்மணி ஒருவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில், இவர் தனது கணவரை விடுத்து அண்டை வீட்டுக்காரர் தையல்காரர் ஒருவர் ஆகிய திலீப்குமார் என்பவருடன் கள்ளத் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதனை அறிந்த கணவர் பலமுறை இதுகுறித்து அவரது மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் இவர்கள் கடந்த இரண்டு வருடங்களாக தங்களது கள்ளத்தொடர்பில் நீடித்துக் கொண்டே தான் இருந்துள்ளனர். இந்நிலையில் அங்கன்வாடி சென்றுவிட்டு மாலை ஐந்தரை மணிக்கு எப்போதும் வீடு திரும்பக் கூடிய கமலா கடந்த 24ஆம் தேதி வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது கணவர் சித்பூரா காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல்துறையினர் கமலாவை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு மூன்று நாட்கள் ஆகியும் கமலா கிடைக்கவில்லை.

இந்நிலையில்,  நவம்பர் 27ஆம் தேதியன்று அங்குள்ள லாட்ஜ் அறை ஒன்று பூட்டப்பட்டு இருப்பதாகவும் அதில் இருந்து துர்நாற்றம் வீசுவதையும் அறிந்து காவல்துறையினருக்கு சந்தேகத்தின் பேரில் தகவல் அளித்துள்ளனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் கதவை உடைத்து பார்த்தபோது பெண் ஒருவரின் சடலம் மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி அழுகிய நிலையில் இருந்ததையும் கண்டறிந்துள்ளனர். அதன்பின் உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்த போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன் அந்தப் பெண்ணின் சடலம் யார் என்பது குறித்து சிசிடிவி காட்சிகள் மூலமாக அறியத் துவங்கியுள்ளனர். அப்பொழுது கமலாவின் கணவர் கொடுத்த புகாரில் நிலுவையில் இருந்ததால் அவரும் அவ்விடத்திற்கு வரவழைக்கப்பட்ட சடலத்தை பார்த்து தனது மனைவி தன் அடையாளம் கூறியுள்ளார்.

இதனை அடுத்து சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் என்ன நடந்தது என தேடி வந்துள்ளனர். அப்பொழுது தான் தெரியவந்துள்ளது நவம்பர் 24ஆம் தேதி காலை கமலா அங்கன்வாடி செல்லாமல் 11 மணியளவில் திலீப்புடன் லாட்ஜில் ரூம் போட வந்து உள்ளார். ஆனால் மதியம் இரண்டரை மணிக்கு கமலா ரூமில் இருந்து வெளியே வரவில்லை ஆனால் திலீப் மட்டும் லாட்ஜ் ரூமில் இருந்து வெளியேறுவதை வீடியோ காட்சிகள் மூலமாக போலீசார் கண்டறிந்துள்ளனர். அங்கே தான் கொலை செய்து தூக்கில் மாட்டிவிட்டு இருக்க வேண்டும் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். தற்போது திலீப்பை கைது செய்ய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கொலை குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Rebekal

Recent Posts

தேர்தல் ஒப்புகை சீட்டு வழக்கு.! உச்சநீதிமன்றத்தின் 5 கிடுக்கிப்பிடி கேள்விகள்…

VVPAT Case : தேர்தல் ஒப்புகை சீட்டு சரிபார்க்கக் கோரும் வழக்கில் தேர்தல் ஆணையத்திடம் உச்சநீதிமன்றம் 5 கேள்விகளை கேட்டுள்ளது. இந்திய தேர்தல்கள் அனைத்தும் EVM மிஷின்கள்…

3 mins ago

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கைது!

RB Udhayakumar: மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் உள்ளிட்டோர் கைது. மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உரம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று…

7 mins ago

மக்களே உஷார்!! 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுத்த வானிலை மையம்.!

TN Yellow Alert: தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு வானிலை மையம் வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டுக்கு…

9 mins ago

சுத்தமா சரியில்லை…மோசமான பீல்டிங் செட்! ருதுராஜை விமர்சித்த அம்பதி ராயுடு!

Ruturaj Gaikwad : லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டெத் ஓவர்களில் சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மோசமான பீல்ட் பிளேஸ்மென்ட் செய்ததாக அம்பதி ராயுடு விமர்சித்துள்ளார்.…

16 mins ago

இப்படியொரு மோசடியில் சிக்கிய மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள்.! பாய்ந்தது வழக்கு.!

Manjummel Boys: உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தமஞ்சும்மல் பாய்ஸ் பட தயாரிப்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியாகி அமோக வரவேற்பு மற்றும்…

35 mins ago

காங்கிரஸ் ஆட்சியில் சாதிவாரி கணக்கெடுப்பு… இது ராகுல் கியாரண்டி.!

Congress Manifesto : காங்கிரஸ் அரசு வந்தவுடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம் என ராகுல்காந்தி உத்தரவாதம் அளித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் வாக்குறுதியில் காங்கிரஸ் கட்சியின் மிக முக்கிய…

56 mins ago