போலி டிஆர்பி… BARC-இன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கைது..!

போலி டிஆர்பி… BARC-இன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கைது..!

போலி டிஆர்பி வழக்கில் மும்பை காவல்துறை நேற்று புனே மாவட்டத்தைச் சேர்ந்த தொலைக்காட்சி பார்வையாளர் மதிப்பீட்டு கணிப்பு நிறுவனமான BARC-இன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி பார்த்தோ தாஸ்குப்தா கைது செய்யப்பட்டார்.  டிஆர்பி மோசடி செய்ததாக கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்ட பதினைந்தாவது நபர் பார்த்தோ தாஸ்குப்தா.

பார்த்தோ தாஸ்குப்தா புனே மாவட்டம் ராஜ்காட் காவல் நிலைய வரம்பில் இருந்து குற்ற புலனாய்வு பிரிவு (சி.ஐ.யு) கைது செய்யப்பட்டார். இவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது. முன்னதாக, இந்த வழக்கில் பார்க் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ரோமில் ராம்கரியாவை சிஐயு கைது செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தொலைக்காட்சி மதிப்பீட்டு நிறுவனமான பார்க் சில சேனல்களால் டிஆர்பி மோசடி செய்வது குறித்து புகார் கொடுத்ததை அடுத்து மும்பை போலீசார் விசாரணையைத் தொடங்கினர். டி.ஆர்.பி மூலம் தொலைக்காட்சி சேனல்கள் விளம்பரதாரர்களை ஈர்க்க உதவுகிறது.

author avatar
murugan
Join our channel google news Youtube