மத்திய அரசின் புதிய விதிகளை ஏற்கத் தயார் என்று பேஸ் புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்திய அரசாங்கத்தின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MEITY) கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி,அனைத்து சமூக நிறுவனங்களுக்கும் புதிய விதிகளை பிறப்பித்து அவற்றை பின்பற்ற மூன்று மாத கால அவகாசம் அளித்தது.
அதன்படி,இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நிறுவனமும் தங்களுக்கான ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்றும்,அந்த அதிகாரியின் பெயர் மற்றும் தொடர்பு முகவரியை அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்தது.
இதன் மூலம் புகார் அளித்தல்,ஆட்சேபிக்கத்தக்க உள்ளடக்கத்தை கண்காணித்தல்,இணக்க அறிக்கை மற்றும் ஆட்சேபகரமான உள்ளடக்கத்தை நீக்குதல் போன்றவற்றை செய்ய அரசு நோக்கமாக கொண்டுள்ளது.
ஆனால்,மத்திய அரசின் இந்த புதிய விதிகளுக்கு எந்தவித பதிலையும் பேஸ்புக்,ட்விட்டர்,இன்ஸ்ட்ராகிராம் பதிலளிக்காத நிலையில் இத்தகைய தளங்கள் மீது அடுத்தகட்ட நடவடிக்கைள் எடுக்கப்படலாம் என்றும்,அடுத்த 2 நாட்களில் தடை செய்யக்கூட வாய்ப்பிருக்கிறது என்றும் தகவல் வெளியாகியது.
இந்நிலையில்,மத்திய அரசின் புதிய விதிகளை ஏற்கத் தயார் என்று பேஸ் புக் நிறுவனம் அடிபணிந்துள்ளது.
மேலும்,இதுகுறித்து பேஸ்புக் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், “நாங்கள் மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு உட்பட்டு,தேவையான மாற்றங்களை செய்ய உள்ளோம்.மேலும்,மக்கள் சுதந்திரமாகவும்,பாதுகாப்பாகவும் தங்கள் கருத்துகளை வெளியிட பேஸ்புக் உறுதியாக இருக்கும்”,என்று தெரிவித்தார்.
ஆனால்,தற்போது வரை ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை புதிய விதிகளை ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Ilayaraja: இசையமைப்பாளர் தொடர்ந்த வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. எக்கோ என்ற தனியார் இசைப்பதிவு நிறுவனத்துக்கும், ஏஸ் மியூசிக் நிறுவனத்துக்கும் இடையே, திரைப்படப் பாடல்கள் தொடர்பான…
IPL 2024: டெல்லி அணிக்கு எதிரான தோல்வி குறித்து குஜராத் கேப்டன் சுப்மன் கில் வேதனை தெரிவித்தார். நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.…
Phase 2 Election: கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் நாளை தேர்தல் நடைபெறுகிறது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று…
Kenya floods: கென்யாவின் பல பகுதிகளில் வெள்ளம் அடித்துச் சென்றதில் பலி எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவில் பெய்த கனமழை காரணமாக…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதராபாத் அணியும், பெங்களுரு அணியும் மோதுகிறது. இந்த ஆண்டில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் 41-வது போட்டியாக…
School Reopen: ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் என திருவள்ளூர் முதன்மைக் கல்வி அலுவலர் கூறிஉள்ளார். 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முன்னதாக…