மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு!

தமிழகத்தில் ஜூன் 6 ஆம் தேதி வரை மின் கட்டணத்தை செலுத்த கால அவகாசம் நீடித்துள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

தாழ்வழுத்த நுகர்வோர்கள் மின் கட்டணத்தை செலுத்த ஜூன் 6 ஆம் தேதி வரை கால அவகாசம் நீடித்துள்ளதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தமிழக அரசு தகவல் தெரிவித்த நிலையில், தற்பொழுது மின்வாரியம் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது

மின் கட்டணத்தை செலுத்த மார்ச் 25 முதல் ஜூன் 5 வரை கடைசி தேதி உள்ள நுகர்வோருக்கு ஜூன் 6 ஆம் தேதி வரை கால அவகாசம் அளித்துள்ளதாக தெரிவித்த மின் வாரியம், தாமத கட்டணம், மறுமின் இணைப்பு கட்டமின்றி தாழ்வழுத்த (LT/LTCT) நுகர்வோர் கட்டணமும் செலுத்தலாம் என தெரிவித்துள்ளது.