தமிழகத்தில் சிறப்பு ரயில் சேவைக்கான தடை  நீட்டிப்பு

தமிழகத்தில் சிறப்பு ரயில் சேவைக்கான தடை  நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், கொரோனா பரவலை தடுக்க ஜூலை 31-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.  இதனால், ஏற்கனவே ஜூலை 1-ம் தேதி முதல் ஜூலை 15-ம் தேதி வரை பேருந்துகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுஇருந்தது.இதனிடையே நேற்று  தமிழகத்தில் மீண்டும் தனியார் மற்றும் அரசு பேருந்து சேவை 31-ம் தேதி வரை இயங்காது என அறிவிக்கப்பட்டது.  கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வரும் 31-ம் தேதி வரை பேருந்துகள் இயங்காது  என தமிழக அரசு  அறிவித்தது.

இந்நிலையில் தமிழகத்தில் சிறப்பு ரயில் சேவைக்கான தடை  நீட்டிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்,திருச்சி- செங்கல்பட்டு, மதுரை- விழுப்புரம், கோவை- காட்பாடி ரயில்கள் 31-ஆம்  தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.ஏற்கனவே 15-ஆம் தேதி வரை ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில்,நீட்டிக்கப்பட்டுள்ளது . தமிழக அரசின் கோரிக்கையை அடுத்து, ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  ரத்து செய்யப்படும் ரயில்களுக்கான கட்டணம் பயணிகளுக்கு திரும்ப அளிக்கப்படும் என்றும் திருச்சி- மயிலாடுதுறை, அரக்கோணம்- கோவை, கோவை- மயிலாடுதுறை, திருச்சி- நாகர்கோயில் ரயில் சேவை வரும் 31-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்துள்ளது.