பெண்கள் விடுதி உரிமம் பதிவு செய்வதற்கான கால அவகாசம் ஜன.20 வரை நீட்டிப்பு…!!

மகளிர் விடுதிகளை பதிவு செய்வதற்கான கால அவகாசம், ஜனவரி 20-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் சமீபத்தில், பெண்கள் விடுதியில் கேமரா வைத்து, அங்கு தங்கி இருந்த பெண்களை தவறாக வீடியோ எடுத்த விடுதியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். அந்த விடுதி, உரிமம் இல்லாமல் இயங்கி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து, நகரில் இயங்கிவரும் பெண்கள் விடுதிகளை, முறையாக பதிவு செய்ய டிசம்பர் 31-ம் தேதி வரை மாவட்ட ஆட்சியர் அவகாசம் வழங்கி இருந்தார்.
இந்நிலையில், இந்த கால அவகாசம் ஜனவரி 20-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, உரிமம் பெறுவதில் உள்ள சந்தேகங்களை தீர்க்கும் விதமாக, ஜனவரி 8-ம் தேதி, விடுதி உரிமையாளர்கள், காவல்துறை, மாநகராட்சி, சுகாதாரத்துறை, சமூக நலம், வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர்களின் ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்க உள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment