பாகிஸ்தான் கராச்சி பல்கலைக்கழகம் அருகே வெடி விபத்து…!

பாகிஸ்தானில் உள்ள கராச்சி பல்கலைக்கழக வளாகத்தில் வெடிவிபத்து. 5 பேர்  உயிரிழப்பு.

பாகிஸ்தானில் உள்ள கராச்சி பல்கலைக்கழக வளாகத்தில், திடீரென்று ஒரு வேனில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இருவர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் வெடி விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து ஆராய்ந்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் சீன நாட்டை சேர்ந்தவர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த குண்டு வெடிப்பு தீவிரவாதிகளின் நாச வேலையா? அல்லது  விபத்தா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.