#ExitPolls: புதுச்சேரியில் ஆட்சி அமைக்கப்போவது யார்?? வெளியானது கருத்துக்கணிப்பு முடிவுகள்!

புதுச்சேரியில் பாஜக – என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி 16-20 இடங்களில் வெற்றிபெற்று, ரங்கசாமி ஆட்சியை பிடிப்பார் என்று ரிபப்ளிக் – சி.என்.எக்ஸ் இணைந்து வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள், வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியாகவுள்ளது. இந்தநிலையில், புதுச்சேரியில் உள்ள 30 சட்டப்பேரவை தொகுதிகளில் தேர்தலுக்குப் பின் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளை ரிபப்ளிக் – சி.என்.எக்ஸ் இணைந்து வெளியிட்டுள்ளது. அதில் பாஜக – என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி 16-20 இடங்களில் வெற்றிபெறும் என்றும், காங்கிரஸ் கூட்டணி 11-13 இடங்களில் வெற்றி பெற்று ரங்கசாமி ஆட்சியை பிடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.