ரகசியமாக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த வெளியேறிய போட்டியாளர்கள்!

ரகசியமாக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த வெளியேறிய போட்டியாளர்கள்!

பிக்பாஸ் வீட்டிற்குள் இன்று யாருக்கும் தெரியாமல் வெளியேறிய போட்டியாளர்களாகிய அர்ச்சனா, நிஷா, சுரேஷ், ரேக்கா ஆகிய நால்வரும் வந்துள்ளனர்.

இன்றுடன் 99 நாட்களாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த வாரத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் 6 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். கடந்த வாரத்திற்கான வாக்கெடுப்பில் குறைவான வாக்குகளை பெற்று ஷிவானி நாராயணன் நேற்று வெளியேற்றப்பட்டுள்ளார்.

இந்த வாரத்தில் பிரமாண்டமான ஃபினாலே நடைபெற உள்ள நிலையில், இன்று வெளியேறிய போட்டியாளர்களாகிய அர்ச்சனா, நிஷா, ரேக்கா மற்றும் சுரேஷ் ஆகிய நால்வரும் உள்ளே இருக்கும் மற்ற போட்டியாளர்களுக்கு தெரியாமலேயே பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். சமையல் அறையில் யாரோ சமைப்பது போல இருக்கிறதே என்று உள்ளே சென்று எட்டி பார்த்தால், அர்ச்சனா இருப்பதை கண்டு ஓடி செல்ல மற்ற மூவரையும் பார்த்து அணைத்து போட்டியாளர்களும் சந்தோஷத்துடன் கட்டியணைக்கின்றனர். இதோ அந்த வீடியோ,

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

author avatar
Rebekal
Join our channel google news Youtube