65 வகை பிரியாணிகளை சமைத்து அசத்திய மாணவர்கள்.! ருசித்துப் பார்த்து மாணவிகள்.!

சேலத்தில் கல்லூரி மாணவர்கள் கலந்துகொடு பிரியாணி தயாரிக்கும் திருவிழா நடைபெற்றது. தனியார் கல்லூரி ஒன்றில் நிகழ்ந்த இந்த நிகழ்ச்சியில், 200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். இதில் ஹைதராபாத் பிரியாணி, தம் பிரியாணி, ஆம்பூர் பிரியாணி, செட்டிநாடு பிரியாணி என 65 வகை பிரியாணிகளை மாணவர்கள் சமைத்து அசத்தினர். மேலும் இதில் சிறப்பாக பிரியாணி சமைத்த இளைஞர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னர் புதுமையான முறையில் மாணவர்கள் தயார் செய்த பிரியாணியை, மாணவிகள் சுவைத்துப் பார்த்து வாழ்த்து தெரிவித்தனர். 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்