பரபரப்பு.. ஓபிஎஸ்ஸை வெளியேற சொல்லி பொதுக்குழு அரங்கிற்குள் உறுப்பினர்கள் முழக்கம்!

பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் முன்னிலையில் ஒற்றைத் தலைமை வேண்டும் என முழக்கமிட்டதால் பரபரப்பு.

சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. தற்காலிக அவைத்தலைவர் தமிழ் உசேன் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெறும் கூட்டத்தில் சுமார் 2,500க்கும் மேற்பட்ட பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர். பொதுக்குழு நடக்கும் இடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீசெல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஆதரவாளர்களும், மூத்த நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்களும் என பலரும் திரண்டுள்ளனர்.

இந்த நிலையில், வானகரத்தில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்துக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வந்தடைந்தார். அப்போது, அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என ஓ.பி.எஸ்-க்கு எதிராக தொடர்ந்து எடப்பாடி ஆதவாளர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதன்பின், அதிமுக பொதுக்குழு நடைபெறும் ஸ்ரீவாரு மண்டபத்துக்குள் ஓ.பன்னீர்செல்வம் வரும்போது, எடப்பாடி ஆதரவாளர்கள் ஒற்றைத் தலைமை வேண்டும் என முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். ஸ்ரீவாரு மண்டபத்துக்குள் வந்த ஓபிஎஸ் வெளியேற சொல்லி பொதுக்குழு உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

இ.பி.எஸ் ஆதரவாளர்களின் முழக்கத்தால் அரங்கத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. ஓபிஎஸ் ஒழிக, துரோகி ஓபிஎஸ் என முழக்கமிட்டு வருவதால் அதிமுக பொதுக்குழுவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொடண்டர்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது ஆயிரம் கைகள் மறைத்தாலும் ‘ஆதவன்’ மறைவதில்லை என எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வளர்மதி பேசியுள்ளார். நீதிமன்றம் ஆணைப்படி பொதுக்குழு நடப்பதால் அமைதி காக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

பொதுக்குழு உறுப்பினர்கள் இராணுவ கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்றும்  உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும் எனவும் ஆர்பி உதயகுமார் கூறினார். இதனிடையே, தொண்டர்கள் துரோகி என முழக்கமிட்டதால் பொதுக்குழு மேடையில் இருந்து கீழே இறங்கினார் வைத்திலிங்கம். அதிமுக பொதுக்குழுவில் உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பு உறுப்பினர்கள் வாக்குவாதத்தால் அதிமுக பொதுக்குழு நடைபெறும் மண்டபத்தில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், ஓபிஎஸ் மேடையில் அமர்ந்தார் என்றும் கூறப்படுகிறது.

பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Recent Posts

ஏவல் ,பில்லி, சூனியத்திலிருந்து காக்கும் பிரத்தியங்கிரா தேவி ஆலயம் .!

பிரத்தியங்கிரா தேவி- பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தின் சிறப்புகள் மற்றும் அமைந்துள்ள இடம் பெற்று இப்பதிவில் அறியலாம். பிரத்தியங்கிரா தேவி ஆலயம் அமைந்துள்ள இடம்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்…

1 hour ago

தலையில் பேன்டேஜ் உடன் வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.!

Andhra Pradesh Election : ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வேட்புமனுத்தாக்கல் செய்தார். ஆந்திர பிரதேசத்தில் உள்ள 25 மக்களவை…

2 hours ago

தோனியின் ஸ்வாரஸ்யமான விஷயத்தை உடைத்த ருதுராஜ் ..!! யூடூபர் மதன் கௌரியிடம் கூறியது இதுதான் !!

Ruturaj Gaikwad : தமிழக யூடூபரான மதன் கௌரியுடன் நடந்த ஒரு நேர்காணலில் 'தல' தோனியின் ஸ்வாரஸ்யமான ரகசியத்தை பற்றி ருதுராஜ் கெய்க்வாட் பேசி இருந்தார். தமிழக யூடூபரான…

2 hours ago

பீகாரில் பயங்கர தீ விபத்து… 6 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!

Patna: பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாட்னா ரயில்…

3 hours ago

உங்களுக்கு இதே வேலையாக போச்சி… பிரதமரிடம் நேரம் கேட்ட கார்கே.!

Congress : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விளக்கி கூற பிரதமரிடம் நேரம் கேட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விளக்கம் அளித்துள்ளார். கடந்த ஞாயிற்று கிழமை அன்று…

3 hours ago

நள்ளிரவில் அமோக வரவேற்பு ! குகேஷுக்கு மேலும் குவியும் பாராட்டுகள் !

Gukesh D : நடைபெற்ற கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. கனடா நாட்டில் நடைபெற்று வந்த பிடேகேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில்…

3 hours ago