பரபரப்பு : ஆதரவாளர்களுடன் இணைந்து முதல்வர் வீட்டை முற்றுகையிட்ட முன்னாள் எம்.எல்.ஏ …!

சென்னையில் அதிமுகவுக்கு செல்வாக்கு நிறைந்த தொகுதியை பாஜக-க்கு ஒதுக்கியதாக கூறி, முன்னாள் எம்.எல்.ஏ தனது ஆதரவாளர்களுடன் வந்து, முதல்வர் வீட்டை முற்றுகையிட்டுள்ளனர்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம் என மிகவும் தீவிரமாக  செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிட்டுள்ள நிலையில், இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், சென்னையில் அதிமுகவுக்கு செல்வாக்கு நிறைந்த தொகுதியை பாஜக-க்கு ஒதுக்கியதாக கூறி, முன்னாள் எம்.எல்.ஏ தனது ஆதரவாளர்களுடன் வந்து, முதல்வர் வீட்டை முற்றுகையிட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.