ரஜினி, கமல் வரும்போது கூட்டம் கூடுமே தவிர, அது ஓட்டாக மாறாது – விஜய் வசந்த்

ரஜினி ஆரம்பிக்கும் கட்சிக்கு இப்போது நேரம் சரி இல்லை என்று மறைந்த கன்னியாகுமரி எம்.பி.வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் பேட்டியளித்துள்ளார்.

தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு காலியாக இருக்கும் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட விரும்பி காங்கிரஸ் மேலிடத்துக்கு விஜய் வசந்த் விருப்பம் தெரிவித்தார். ஆனால், மேலிடம் இதுவரை எந்த சிக்னலும் கொடுக்கவில்லை. இதனால், தனது தந்தையின் பாணியிலேயே தொகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி அரசியல் செய்து வருகிறார்.

இந்நிலையில், ரஜினி, கமல் வரும்போது அவர்களை பார்க்க வேண்டும் என்று தான் கூட்டம் கூடுமே தவிர, அது ஓட்டாக மாறாது என்று மறைந்த எம்.பி.வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார். மேலும் ரஜினி ஆரம்பிக்கும் கட்சிக்கு இப்போது நேரம் சரி இல்லை என்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்