தமிழகத்திற்கு ஊரடங்கு தேவையில்லை.! அடுத்த மாதம் ரயில் மற்றும் பேருந்துகளை இயக்கலாம்.!

நவம்பர் மாத இறுதியில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துவிடும். இனி தமிழகத்தில் ஊரடங்கு தேவையில்லை. அடுத்த மாதம் ( ஆகஸ்ட் ) முதல் பேருந்து, ரயில்களை இயக்கலாம். – பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை முன்னாள் இயக்குனர் குழந்தைசாமி.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தலைநகர் சென்னையில் சற்று குறைந்து வந்தாலும், மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் , சில நாட்களுக்கு முன்னர், புதுச்சேரி மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பாக ‘கொரோனா தொற்று குறித்த உண்மைகள், அதன் தடுப்பு முறைகள், விழிப்புணர்வு’ என்கிற தலைப்பில் புதுசேரியில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை முன்னாள் இயக்குனர் குழந்தைசாமி பேசுகையில், சென்னையில் பாதிப்பு குறைந்து வருகிறது. மற்ற ஊர்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும், கிராம பகுதிகளில் குறைவான அளவே பாதிப்பு இருக்கும்.

நவம்பர் மாத இறுதியில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துவிடும். இனி தமிழகத்தில் ஊரடங்கு தேவையில்லை. அடுத்த மாதம் ( ஆகஸ்ட் ) முதல் பேருந்து, ரயில்களை இயக்கலாம் என அவர் தெரிவித்தார். சில மாதங்களுக்கு மட்டும் 60 வயதிற்கு மேலானோர் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் எனவும், பொதுமக்கள், கட்டாய முகக்கவசம், சோப்பு போட்டு கைகழுவுதல், சமூக இடைவெளி போன்றவைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். எனவும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை முன்னாள் இயக்குனர் குழந்தைசாமி தனது கருத்துக்களை தெரிவித்தார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.