#BREAKING: பாஜக வேட்பாளர் காரில் ஈ.வி.எம் ; 4 அதிகாரிகள் சஸ்பெண்ட்.!

பாஜக வேட்பாளர் காரில் வாக்குப்பதிவு இயந்திரம் பிடிப்பட்டது தொடர்பாக 4 அதிகாரிகள் சஸ்பெண்ட்.

மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களில் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்றது.அசாமில் உள்ள பதர்கண்டி தொகுதியில்  வாக்குப்பதிவு முடிந்த நிலையில் நேற்று வாக்குப்பதிவு இயந்திரம் பாஜக வேட்பாளர் காரில் கண்டுபிடிக்கப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வாக்குப்பதிவு இயந்திரம் எடுத்து செல்லும் தேர்தல் ஆணையத்தின் கார் பழுதானதால் வழியில் சென்ற வேறொரு காரில் லிப்ட் கேட்டு வாக்குப்பதிவு எந்திரத்தில் ஏற்றிச் சென்றதாக தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது. லிப்ட் தந்ததுஅதே தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கார் என்பது தேர்தல் அதிகாரிகளுக்கு தெரியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

பாஜக வேட்பாளர் காரில் வாக்கு இயந்திரம் கொண்டு செல்லப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, தற்போது 4 அதிகாரிகள்  சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவு இயந்திரம் சேதமடையவில்லை என எனவும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்ட வாக்குச்சாவடியில் மறுவாக்குப் பதிவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
murugan