தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்- கமல்ஹாசன்

தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்- கமல்ஹாசன்

வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை எக்காரணம் கொண்டும் திறக்கக் கூடாது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறுகையில்,டெல்லியில் இருந்து ஜெனரேட்டர் வைத்து இயக்கினாலும் பழுதுபட்டுள்ள தமிழக அரசை சரிசெய்ய முடியாது.எல்லாம் இருந்தும் பழுதுபட்டு இருக்கிறது என்பதுதான் இன்றைய தமிழக அரசின் நிலையாக உள்ளது.

தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை எக்காரணம் கொண்டும் திறக்கக் கூடாது. மறுவாக்குப்பதிவுக்கான அறிவிப்பு சந்தேகத்தை எழுப்புகிறது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *