இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனியின் மனைவி சாக்ஷி. தற்போது தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் இருந்து வருகின்றன. ராஞ்சியில் அடிக்கடி மின்சாரம் தடை ஏற்பட்டு வருவதாக நேற்று முன்தினம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறுகையில், ராஞ்சியில் மக்கள் அனைவரும் தினமும் மின்சார தடை அனுபவித்து வருகின்றனர். தினமும் 4 முதல் 7 மணிநேரம் மின்சாரம் நிற்கிறது. அதில் இன்று மட்டும் 5 மணிநேரம் மின்சாரம் இல்லை. பண்டிகை நாட்கள் தற்போது இல்லாததால் இருப்பது ஒரு ஆறுதலான விஷயம் என கூறியுள்ளார்.
#ranchi pic.twitter.com/OgzMHoU9OK
— Sakshi Singh ????????❤️ (@SaakshiSRawat) September 19, 2019
இவர் தன் பதிவை பார்த்த இணைதள வாசிகள் பலர் இதுபோன்ற கொடுமை பல இடங்களில் நடந்து வருவதாக கூறினார்கள்.