12 முதல் 17 வயதிலான குழந்தைகளுக்கு மாடர்னா தடுப்பூசி செலுத்த ஐரோப்பிய மருந்துகள் கண்காணிப்புக் குழுஅனுமதி..!

12 முதல் 17 வயதிலான குழந்தைகளுக்கு மாடர்னா தடுப்பூசி செலுத்த ஐரோப்பிய மருந்துகள் கண்காணிப்புக் குழுஅனுமதி..!

12 முதல் 17 வயதிலான குழந்தைகளுக்கு மாடர்னா தடுப்பூசி செலுத்த ஐரோப்பிய மருந்துகள் கண்காணிப்புக் குழு அனுமதி அளித்துள்ளது. 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக பல நாடுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் கடந்த மே மாதம் 12 முதல் 15 வயதுள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி எடுத்துக்கொள்ள அனுமதி அளித்துள்ளது. இதனை தொடர்ந்து தற்போது 12 முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கு மாடர்னாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசி பயன்படுத்த ஐரோப்பிய மருந்துகள் கண்காணிப்புக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடர்பாக ஐரோப்பிய மருத்துவ அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ’18 வயதுக்கு மேலானவர்களுக்கு போடப்படும் ஸ்பைக்வாக்ஸ் தடுப்பூசி 12 முதல் 17 வயதிலான குழந்தைகளுக்கு போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 12 முதல் 17 வயதிலான 3,732 குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் போது வெளியாகும் அதே அளவிலான நோய் எதிர்ப்பு சக்தி குழந்தைகளிடமும் காணப்பட்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube