ஈரோடு: ஆலையில் வாயு கசிந்ததால் ஒருவர் உயிரிழப்பு; 13 பேர் பாதிப்பு..!

ஈரோட்டியில் கெமிக்கல் ஆலையில் வாயு கசிந்ததால் மூச்சுதிணறல் ஏற்பட்டு 13 பேர் பாதிக்கப்பட்டனர்.

ஈரோடு அருகே சித்தோடு பகுதியில் இயங்கிவரும் தனியார் கெமிக்கல் ஆலையில் வாயு கசிந்ததால் மூச்சுதிணறல் ஏற்பட்டு 13 பேர் பாதிக்கப்பட்டனர். ஆலையில்  கசிந்த வாயுவை சுவாசித்த நடுப்பாளையத்தை சார்ந்த தாமோதரன் என்பவர் மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்தார்.

மேலும், மூச்சுத்திணறல் ஏற்பட்டு 13 பேர் சிகிக்சைக்காக ஈரோடு  அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாயு கசிந்த ஆலையை ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி நேரில் ஆய்வு செய்தார்.

author avatar
murugan