ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – முதல்வர் இரண்டு நாள் பரப்புர..!

வரும் 24, 25 ஆம் தேதி காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து முதல்வர் பரப்பரை மேற்கொள்ள உள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ வாக இருந்த திருமகன் ஈவேரா மாரடைப்பு காரணமாக மறைந்ததையடுத்து, காலியாக உள்ள அந்த  தொகுதிக்கு வரும் பிப்-27 இல் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

 

இதனையடுத்து அரசியல் கட்சியினர் தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதஹ்ரிது பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.

cmmkstalintngovt

அதன்படி, வரும் 24, 25 ஆம் தேதி காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து முதல்வர் பரப்பரை மேற்கொள்ள உள்ளார். அந்த வகையில் 24ஆம் தேதி வெட்டிக்காட்டுவலசு, நாச்சாயி டீக்கடை, சம்பத் நகர் ஆகிய இடங்களிலும், 25-ஆம் தேதி ஜெகநாதபுரம் காலனி, சூரம்பட்டி நால்ரோடு, மணிக்கூண்டு உள்ளிட்ட இடங்களிலும் பரப்பரை மேற்கொள்கிறார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment