ஈரோடு இடைத்தேர்தல் நிலவரம் : அதிமுக பொதுக்குழு கடிதம் மதியம் 3மணிக்கு தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைப்பு.!

ஈரோடு இடைத்தேர்தலில் இபிஎஸ் தரப்பு வேட்பாளர் தென்னரசு போட்டியிட அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் அளித்த ஆதரவு கடிதம் மதியம் 3மணிக்கு தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது. 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்னாள் எம்எல்ஏ தென்னரசுவும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் செந்தில்முருகனும் அறிவிக்கப்பட்டனர். இதில், இரட்டை இலை சின்னத்தில் யார் போட்டியிடுவது என்ற குழப்பம் தொடர்ந்து வந்த நிலையில், உச்சநீதிமன்றம் வாய் வழக்கு சென்றது.

அதில், இபிஎஸ் – ஒ.பி.எஸ் என தரப்பையும் உள்ளடக்கிய பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, வேட்பாளரை முடிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களால் எடுக்கப்படும் முடிவு அவைத்தலைவரால் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டும் என அறிவித்திருந்தது.

இதனையடுத்து, சில தினங்களுக்கு முன் சென்னை ராயப்பேட்டையில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை  கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தென்னரசு ஈரோடு கிழக்கு தேர்தலில் போட்டியிடுவார் என்றும், இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடுகான ஏ,பி உள்ளிட்ட படிவங்களில் கையெழுத்திட தமிழ் மகன் உசேனுக்கு அதிகாரம் அளிக்கப்படுவதாகவும், அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தேர்தல் ஆணையத்திற்கு முறைப்படி தகவல் தெரிவிக்கவும் பொதுக்குழு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோர் டெல்லி புறப்பட்டனர். இந்த அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் அளித்த வேட்பாளர் ஒப்புதல் படிவங்கள் இன்று பிற்பகல் 3 மணிக்கு தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கபட உள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment