ENGvsPak Test: டெஸ்ட் போட்டிகளில் புதிய உலகசாதனை! அதிரடி காட்டிய இங்கிலாந்து.!

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் செசனில் அதிக ரன்கள் குவித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது.

17 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில், டெஸ்ட் தொடரில் விளையாட சென்றுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று ராவல் பிண்டி மைதானத்தில் தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. இதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி, டெஸ்ட் போட்டிகளில் முதல் செசனில் உணவு இடைவெளிக்கு முன்பாக விக்கெட் இழப்பின்றி 177 ரன்கள் குவித்து புதிய உலகசாதனை படைத்திருக்கிறது.

இதற்கு முன்பாக 2018 ஆம் ஆண்டு இந்திய அணி, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக உணவு இடைவேளைக்கு முன் 158/0 ரன்கள் அடித்ததே இதுவரை சாதனையாக இருந்து வந்தது. இந்தியாவின் இந்த சாதனையை இங்கிலாந்து அணி தற்போது முறியடித்துள்ளது.

author avatar
Muthu Kumar

Leave a Comment