ஜானி பேர்ஸ்டோவ் அதிரடியில் நியூஸிலாந்திற்கு 306 ரன்கள் இலக்காக வைத்த இங்கிலாந்து !

இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியும் ,நியூஸிலாந்து அணியும் மோதி வருகிறது. இப்போட்டி செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்டில் உள்ள ரிவர்சைடு மைதானத்தில் நடைபெறுகிறது . இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜானி பேர்ஸ்டோவ் , ஜேசன் ராய் இருவருமே களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே இருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.இவர்களின் கூட்டணியில் அணியின் எண்ணிக்கை உயர்ந்தது.

 இருவருமே நிதானமாக விளையாடி அரைசதத்தை நிறைவு செய்தார்.ஜேசன் ராய் 61 பந்தில் 60 ரன்கள்  எடுத்து 8 பவுண்டரி விளாசி வெளியேறினர்.பின்னர் ஜோ ரூட் களமிறங்கினர். நிதானமாகவும் ,அதிரடியாகவும் விளையாடி வந்த ஜானி பேர்ஸ்டோவ் 99 பந்தில்  15 பவுண்டரி , ஒரு சிக்ஸர் விளாசி 104 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

ஜோ ரூட் பொறுமையாக விளையாடிய  24 ரன்னில் வெளியேறினார். பிறகு இறங்கிய ஜோஸ் பட்லர்  11 ரன்னில் கேப்டன் வில்லியம்சனிடம் கேட்சை கொடுத்து வெளியேறினார். மத்தியில் இறங்கிய கேப்டன் மோர்கன் சிறப்பான ஆட்டத்தால் 42 ரன்கள் குவித்தார்.

பின்னர் இறங்கிய வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட் ஆனார்கள்.இறுதியாக 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 305 ரன்கள் எடுத்தனர்.நியூஸிலாந்து அணி பந்து வீச்சில் ட்ரெண்ட் போல்ட் , மாட் ஹென்றி , ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் தலா இரு விக்கெட்டை பறித்தனர். 306 ரன்கள் இலக்குடன் நியூஸிலாந்து அணி களமிறங்க உள்ளது.

author avatar
murugan