2 விக்கெட்டை பறிகொடுத்த இங்கிலாந்து..!

இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி சென்னையில்  நடைபெற்று வருகிறது. போட்டியில்டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து, தொடக்க வீரர்களாக ரோரி பர்ன்ஸ், டொமினிக் சிப்லே களமிறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடி பார்ட்னர்ஷிப் மூலம் 50 ரன்களை எடுத்து 63 ரன்கள் சேர்த்து இருந்தபோது அஷ்வின் வீசிய பந்தை ரிஷப் பன்ட்டிடம் கேட்ச் கொடுத்து ரோரி பர்ன்ஸ் விக்கெட்டை இழந்தார்.

பின்னர், லாரண்ஸ் களமிறங்க வந்த வேகத்தில் லாரண்ஸ் 5 பந்துகளை எதிர்கொண்டு ரன் எடுக்காமல் வெளியேறினார். இதனையடுத்து, கேப்டன் ஜோ ரூட் களமிறங்கி உள்ளார். தற்போது இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழந்து 74 ரன்கள் எடுத்துள்ளது. டொமினிக் சிப்லே 28 ரன்களும், ஜோ ரூட் 8 ரன்களுடனும் களத்தில் விளையாடி வருகின்றனர். இந்திய அணியில் அஷ்வின், பும்ரா தலா ஒரு விக்கெட்டை பறித்தனர்.

author avatar
murugan