பொறியியல் ரேண்டம் எண் … திங்கள் கிழமை வெளியிடப்படும் என தகவல்…

பொறியியல் ரேண்டம் எண் … திங்கள் கிழமை வெளியிடப்படும் என தகவல்…

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்தி வருகிறது.

அந்த வகையில் 2020-21-ம் கல்வியாண்டுக்கான பொறியியல் படிப்பில் சேர விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க ஏற்கனவே அறிவுறுத்தப்பட்ட நிலையில், ஒரு லட்சத்து 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்து, சான்றிதழ்களை பதிவேற்றம் செய்திருந்தனர். அதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் (ஆகஸ்டு) 27-ந் தேதி ரேண்டம் எண்  வெளியிடப்பட்டது. இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என்று தொழில்நுட்ப கல்வி இயக்ககம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது. இந்நிலையில், மாணவர்கள் சிலர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய அவகாசம் கோரினர். இதையடுத்து தரவரிசை பட்டியல் 25-ந் தேதி (நேற்று) வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெளியாகவில்லை. இந்நிலையில் பொறியியல்  படிப்புக்கான தரவரிசை பட்டியல் 28-ந் தேதி திங்கட்கிழமை வெளியாக அதிகம் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

author avatar
kavitha
Join our channel google news Youtube