ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி – முதலமைச்சர் உறுதி!

ஆன்லைன் சூதாட்டத்துக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் உறுதி.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தாரின் இரண்டாவது நாள் இன்று நடைபெற்று வருகிறது. இன்று சட்டப்பேரவையில் கேள்வி – பதில் நேரம்போது, ஆன்லைன் தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்தார். இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், ஆன்லைன் சூதாட்டத்துக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் நிரந்தரமாக தடை விதித்து முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் முதலமைச்சர் முக ஸ்டாலின் விளக்கமளித்தார். இதனிடையே, பேசிய எம்எல்ஏ வைத்தியலிங்கம், நீட் தேர்வு ரத்திற்கு அதிமுக எனும் துணை நிற்கும் என்றும் நீட் குறித்து அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படுவதை வரவேற்கிறேன் எனவும் தெரிவித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்