வேலை வாய்ப்பு நில மோசடி விவகாரம்..! ஆர்ஜேடி எம்எல்ஏகள் தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை..!

வேலை வாய்ப்பு நில மோசடி விவகாரம் தொடர்பாக ஆர்ஜேடி எம்எல்ஏகள் தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியுள்ளது.

வேலை வாய்ப்பு நில மோசடி தொடர்பாக ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர்களான எம்எல்ஏ கிரண் தேவி மற்றும் முன்னாள் எம்எல்ஏ அருண் யாதவ் ஆகியோருடன் தொடர்புடைய பீகாரில் உள்ள பாட்னா மற்றும் அர்ராவில் உள்ள ஒன்பது இடங்களில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) சோதனை நடத்தியது. இதேபோல், டெல்லி என்சிஆர் பகுதியில் உள்ள மாநிலங்களவை எம்பி பிரேம் சந்த் குப்தாவின் வீடுகளிலும் சிபிஐ சோதனை நடத்தியது.

வேலைக்காக நிலம் கொடுத்ததாகக் கூறப்படும் ஊழல் தொடர்பாக, முன்பு சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், மத்திய ரயில்வேயில் முறையற்ற முறையில் நியமனம் செய்யப்பட்டதாகவும், இந்திய ரயில்வேயின் ஆட்சேர்ப்புக்கான விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளை மீறுவதாகவும் சிபிஐ கூறியுள்ளது.

மேலும், லாலு பிரசாத் யாதவ் 2004 முதல் 2009 காலகட்டத்தில் ரயில்வே அமைச்சராக இருந்தபோது, பாட்னாவில் உள்ள வில்-மஹுபாக், வில்-குஞ்ச்வா ஆகிய இடங்களில் உள்ள நிலங்களை கையகப்படுத்தும் நோக்கத்தில் இந்த ஊழல் நடந்துள்ளது என்று விசாரணையில் தெரியவந்துள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், வேலை வாய்ப்பு நில மோசடியில் பீகார் முன்னாள் முதல்வர்கள் லாலு பிரசாத், ராப்ரி தேவி, அவர்களது மகள் மிசா பார்தி மற்றும் 13 பேர் மீது சிபிஐ கடந்த ஆண்டு அக்டோபரில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.