இனிமேல் “யானைகளை” தனி நபர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க கூடாது – ஐகோர்ட் உத்தரவு

இனிமேல் “யானைகளை” தனி நபர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க கூடாது – ஐகோர்ட் உத்தரவு

தமிழகத்தில் தனி நபர்கள் யானைகள் வைத்திருக்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் இனிமேல் யானைகளை தனி நபர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க கூடாது என்று கோவில் யானைகள் பராமரிப்பு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கோயில் கட்டுப்பாட்டில் 32 யானைகளும், தனியார் கட்டுப்பாட்டில் 31 யானைகளும், வனத்துறை கட்டுப்பாட்டில் 67 யானைகளும் உள்ளதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மேலும், கோயில் யானைகள், வளர்ப்பு யானைகள் குறித்து அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு அக்டோபர் வரை அவகாசம் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube