பொது தேர்வுகளுக்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்திக் கொள்ளலாம் – தொடக்ககல்வி இயக்குனர்

பொது தேர்வுகளுக்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்திக் கொள்ளலாம் – தொடக்ககல்வி இயக்குனர்

பொது தேர்வுகளுக்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில், இந்த வைரஸ் பாதிப்பால் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 208 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், 10ஆம் வகுப்பு மற்றும் பிற அரசு பொதுத்தேர்வுப் பணிக்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என தொடக்கக்கல்வி இயக்குநர் கடிதம் அனுப்பியுள்ளார்.

மேலும், நடுநிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்வுப்பணியில் முன்னுரிமை வழங்கலாம் என்றும், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை  அனுப்பியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube