ஒரே குடும்பத்தை தாக்கிய மின்சாரம்..! – 6 பேர் பலி..!

மத்திய பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் மின்சாரம் தாக்கி ஒரு குடும்பத்தில் ஆறு பேர் பலியாகியுள்ளனர். சத்தர்பூர் மாவட்டம் பிஜாபூர் பகுதியை சேர்ந்தவர் லக்ஷ்மன். இன்று காலை எட்டு மணியளவில் இவர் வீட்டின் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய முடிவு செய்துள்ளார்.

அப்பொழுது வெளிச்சம் குறைவாக இருந்த காரணத்தால் மின்சார விளக்கை பயன்படுத்தியுள்ளார். அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கியுள்ளது. இந்நிலையில் அவரை காப்பாற்ற அவரது குடும்பத்தினர் 5 பேர் முயன்றுள்ளனர். அப்போது அவர்களையும் மின்சாரம் தாக்கியுள்ளது.

இதனால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சீதாராம் அவஸ்யா எனும் காவல் அதிகாரி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.