#BREAKING: மின்நுகர்வு அதிகரித்ததால்தான் மின்கட்டணம் அதிகம்.! மின்சார வாரியம்.!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் மின் கட்டணம் வழக்கத்தைவிட அதிகமாக வசூலிப்பதாக பல புகார்கள் எழுந்துள்ளது.

இதையடுத்து, எம்.எல்.ஸ் ரவி என்பவர் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்தபோது, மிழ்நாடு மின்பகிர்மான கழகம் சார்பில் விலளக்கம் கொடுக்கப்பட்டது.

அதில், ஊரடங்கால் மக்கள் வீடுகளிலேயே இருந்ததால் மின்கட்டணம் உயர்ந்துள்ளது. பொதுமுடக்கம் காரணமாக மக்கள் 18 முதல் 20 மணி நேரம் வீட்டில் இருப்பதால் கூடுதலாக மின் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது . பயன்படுத்தப்பட்ட மின்சாரம் யூனிட் அடிப்படையில் கட்டணம் கணக்கிட முடியாது, பழைய மின் கட்டண தொகையை அடிப்படையாக கொண்டே புதிய மின் கட்டணம் கணக்கிடப்படும் என மின்சார வாரியம் விளக்கம் கொடுத்துள்ளது.

author avatar
murugan