தமிழ் நாட்டில் 2 நாளில் 2 முறை உச்சத்தை தொட்ட மின்சார பயன்பாடு

தமிழ் நாட்டில் 2 நாளில் 2 முறை உச்சத்தை தொட்ட மின்சார பயன்பாடு. அமைச்சர் செந்தில் பாலாஜி ட்வீட். 

தமிழகத்தில் ஒருநாள் மின்பயன்பாடு வரலாற்றில் இல்லாத வகையில் நேற்று முன்தினம் ஒரேநாளில் அதிக அளவு மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்து இருந்த நிலையில், மின்சார பயன்பாடு 2 நாளில் 2 முறை உச்சத்தை தொட்டுள்ளது.

இதுகுறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தனது ட்விட்டர், ‘நேற்று 29/04/22 தமிழகத்தில் மின் நுகர்வு அதிகபட்சமாக 388.10 மில்லியன் யூனிட் பயன்படுத்தப்பட்டுள்ளது. மெகாவாட் அளவில் 17,563 MW. இந்த தேவை எந்த மின் தடையுமின்றி ஈடு செய்யப்பட்டது. இதற்கு முந்தைய உட்சபட்ச நுகர்வு ஏப்ரல் 28ல் , 387.047மி.யூ / 17,370 MW’ என  பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.