#ElectionBreaking : அர்ஜுன் மூர்த்திக்கு ரோபோ சின்னம் ஒதுக்கீடு…!

அர்ஜுன் மூர்த்தியின், இந்திய மக்கள் முன்னேற்ற கட்சிக்கு ரோபோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக இறங்கி வருகிறது. இந்நிலையில் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக கூறப்பட்ட போது, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன் மூர்த்தி நியமிக்கப்பட்டார்.

ஆனால், ரஜினி கட்சி தொடங்கவில்லை என அறிவிப்பு வெளியிட்ட பின், அர்ஜுன் மூர்த்தி, ‘இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி, தேர்தலில் போட்டியிடுகிறார். இதனையடுத்து, இவரது கட்சிக்கு ரோபோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.