#ElectionBreaking : தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அமைச்சர் பெயர் எழுதப்பட்ட டைரி…!

விராலிமலையில் தேர்தல் பறக்கும் படையின் சோதனையின் போது, அமைச்சர் விஜயபாஸ்கர் என பெயர் எழுதப்பட்ட டைரி சிக்கியுள்ளது.

விராலிமலையில் தேர்தல் பறக்கும் படையின் சோதனையின் போது, அதிமுகவினரிடம் இருந்து கரைச்சேலைகள் மற்றும் மளிகை பொருட்களை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ரமேஷ் என்பவர் கொண்டு சென்ற காரில், அமைச்சர் விஜயபாஸ்கர் என பெயர் எழுதப்பட்ட டைரி  சிக்கியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

அந்த டைரியில் பணம், சேலைகள், மளிகை பொருட்கள் விநியோகம் தொடர்பான தகவல்கள் டைரியில் எழுதப்பட்டிருந்தது. மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படும் பொருட்கள் பட்டியலும் எழுதப்பட்டுள்ளது. அந்த டைரியில் விராலிமலை தொகுதியில் உள்ள பகுதிகளின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

தொகுதி முழுவதும் பணம் மற்றும் பொருட்கள் வழங்க விஜயபாஸ்கர் திட்டமிட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இதனை தொடர்ந்து, காரை ஒட்டி வந்த ரமேஷ் என்பவரிடம் பறக்கும் படை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், பறக்கும் படை அதிகாரிகளிடம் சிக்கிய டைரி அமைச்சர் விஜயபாஸ்கரின் டைரி என அதிகாரப்பூர்வமாக இன்னும் தேர்தல் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Recent Posts

மதுரை சித்திரை திருவிழா 2024.! திக் விஜயத்தின் சிறப்புகளை தெரிஞ்சுக்கோங்க .!

மதுரை சித்திரை திருவிழா - சித்திரை திருவிழாவின் 9 ம் நாளான, நாளை நடைபெறும் திக் விஜயத்தின் சிறப்புகளை இப்பதிவில் காணலாம். மதுரை சித்திரை திருவிழா கோலா…

18 mins ago

தமிழகத்தில் தேர்தலை புறக்கணித்த வாக்காளர்கள்… எந்தெந்த இடங்களில் தெரியுமா.?

Election2024 : தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வாக்காளர்கள் தங்கள் கோரிக்கையை முன்னிறுத்தி தேர்தலை புறக்கணித்து வருகின்றனர். தமிழகம், புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் இன்று…

26 mins ago

எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கு ஒட்டு.? சென்னை வாக்குசாவடியில் சலசலப்பு.!

Election2024 : வாக்கு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கு ஓட்டு விழுவதாக சென்னை வியாசர்பாடியில் குற்றசாட்டு எழுந்துள்ளது. சென்னை வியாசர்பாடி எம்.கே.பி. நகர் பகுதியில் உள்ள…

1 hour ago

நண்பகல் வரையில் வாக்குப்பதிவு நிலவரம்… தமிழகத்தை முந்திய புதுச்சேரி.!

Election2024 : தமிழகத்தில் 1 மணி நிலவரப்படி 40.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாடாளுமன்ற தேர்தல்…

2 hours ago

ஹர்திக் பாண்டியாவுக்கு 12 லட்சம் அபராதம்!

ஐபிஎல் 2024 : பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மெதுவதாக பந்துவீசியதால் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு 12 லட்சம் அபராதம். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில்…

2 hours ago

என்னப்பா அப்படியே இருக்கு! மெழுகு அருங்காட்சியகத்தில் விராட் கோலியின் சிலை !!

 Virat Kohli : ஜெய்ப்பூரில் உள்ள மெழுகு அருங்காட்சியத்தில் விராட் கோலியின் மெழுகு சிலையை திறந்துள்ளனர். இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஆன விராட் கோலியின் மெழுகு…

2 hours ago