#ElectionBreaking: ஏப்ரல் 3ம் தேதி முதல் பைக் பேரணிக்கு தடை – தேர்தல் ஆணையம் உத்தரவு

ஏப்ரல் 3 முதல் தேர்தல் நடக்கும் ஏப்ரல் 6 வரை பைக் பேரணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என தமிழக தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

பைக் பேரணி என்ற பெயரில் வாக்காளர்களை அச்சுறுத்துவதாக புகார் எழுந்த நிலையில், ஏப்ரல் 3ம் தேதி முதல் பைக் பேரணிக்கு தடை விதிக்கப்படுகிறது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி, ஏப்ரல் 3 முதல் தேர்தல் நடக்கும் ஏப்ரல் 6 வரை பைக் பேரணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நாள் மற்றும் தேர்தலுக்கு முந்தைய 3 நாளில் தமிழகத்தில் எங்கும் பைக் பேரணி நடத்தக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்