“ஸ்டார்களுடன் களமிரங்கம் பிஜேபி”…!தேர்தல் வியூகம் ரெடி..!அதிருப்தியில் எம்.பிகள்..!!

2019 பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் வேட்கையில் பா.ஜனதா இருக்கிறது. இதற்காக அந்த கட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

Image result for AMIDSHA

இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் பிரபல நடிகர், நடிகைகள், விளையாட்டு துறை உள்பட 70 பிரபலங்களை களத்தில் நிறுத்த பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. நடிகர்கள் அக்‌ஷய்குமார், மோகன்லால், சன்னிதியோல், மாதிரி தீட்சித், கிரிக்கெட் வீரர் ஷேவாக் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்குகிறது.

Image result for akshay kumar

திரைப்பட துறை, விளையாட்டுத் துறை, கலை மற்றும் பண்பாட்டுத்துறை, ஊடகத்துறை போன்ற துறைகளை சேர்ந்த பலர் தங்களது துறைகளில் பல சாதனைகள் புரிந்து மக்கள் மத்தியில் நல்ல மதிப்பை பெற்றுள்ளனர். இதனால் அவர்களுக்கு பல ஆதரவாளர்களும், ரசிகர்களும் உள்ளனர். அவர்களால் கூட்டத்தை திரட்ட முடியும்.

Related image

மேலும் அவர்களால் அரசியலில் மாறுபட்ட சிந்தனைகளையும் தொலைநோக்கு பார்வையும் அளிக்க முடியும் என்று பா.ஜனதா மேலிடம் நம்புகிறது.

அதன்படி அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு நடிகர்கள் அக்‌ஷய் குமார், சன்னி தியோல், மோகன்லால், நடிகை மாதிரி தீட்சித், கிரிக்கெட் வீரர் ஷேவாக் உள்ளிட்ட 70 பிரபலங்களுக்கு வாய்ப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

Related image

டெல்லி தொகுதியில் அக்‌ஷய் குமாரும், குருதாஸ்பூர் தொகுதியில் சன்னி தியோலும், மும்பையில் மாதுரி தீட்சித்தும், திருவனந்தபுரத்தில் மோகன்லாலும் போட்டியிட வாய்ப்பு வழங்குவது பற்றி பரிசிலீக்கப்பட்டு வருகிறது.

Image result for AMIDSHA

பொது வாழ்வில் சாதனைகள் படைத்தவர்களை பா.ஜனதாவுக்குள் கொண்டு வரவேண்டும் என்று பிரதமர் மோடி விரும்புகிறார். அவரது உத்தரவுப்படி பல்வேறு துறைகளில் சாதனை நிகழ்த்தியவர்களை கட்சிக்குள் கொண்டு வருவதற்காக முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

பா.ஜனதாவை சேர்ந்த பெரும்பாலான எம்.பி.க்களுக்கு எதிரான மனநிலையில் மக்கள் உள்ளனர். இதனால் அவர்களுக்கு மாற்றாக புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்குவதால் கட்சியில் உள்ள எம்.பி.க்கள் பலருக்கு அடுத்த தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும் என்ற நிலையில் அதிருப்தியில் உள்ளதாகவும் அவர்களை சரி செய்ய பாஜக இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment