#BreakingNews : தமிழகம் உட்பட 5 மாநிலங்களிலும் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வருவதாக அறிவிப்பு

தமிழகம் உட்பட 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது.

தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்குவங்கம் சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் விரைவில் நிறைவடைகிறது.ஆகவே  தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், தமிழகம் உட்பட 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருகிறது.

தமிழகத்தில் 88,956 வாக்கு மையங்கள், ஒரு மையத்தில் அதிகபட்சமாக 1000 வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க அனுமதி. தமிழகம் – 234 தொகுதிகள் , புதுவை – 30 தொகுதிகள், கேரளம் – 140 தொகுதிகள், மேற்குவங்கம் – 294 தொகுதிகள் ,அசாம் – 126 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. 5 மாநிலங்களில் மொத்தம் 824 தொகுதிகளில் 18.66 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.