அதிமுகவினரிடம் இருந்து 4,500 கோழிக்குஞ்சுகளை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர்…!

வாக்காளர்களுக்கு வழங்க வைத்திருந்த 4,500 கோழிக்குஞ்சுகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். 

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்த முன்னேற்பாடு பணிகள் மற்றும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அனைத்து இடங்களிலும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், குன்னூர் அருகே தலா ஒரு குடும்ப அட்டைதாரர்களுக்கு 25 கோழிக்குஞ்சுகள் வீதம் அதிமுகவினர் வழங்கியுள்ளனர். இதனை தொடர்ந்து, வாக்காளர்களுக்கு வழங்க வைத்திருந்த 4,500 கோழிக்குஞ்சுகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.