தமிழகம் உட்பட 5 மாநிலங்களின் தேர்தல் தேதி இன்று முடிவாகிறது…!

தமிழகம் உட்பட 5 மாநிலங்களின் தேர்தல் தேதி இன்று முடிவாகிறது…!

சுனில் அரோரா தலைமையில், 5 மாநிலங்களிலும் சட்டப்பேரவை தேர்தலுக்கான முன் தயாரிப்பு பணிகள் மற்றும் தேர்தல் அட்டவணையை இறுதி செய்வது குறித்து ஆலோசனை. 

தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்குவங்கம் சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் விரைவில் நிறைவடைகிறது. இதனையடுத்து, இந்த 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்துவது குறித்து, தேர்தல் தலைமை ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர் ஏற்கனவே நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.

இதனை தொடர்ந்து, 5 மாநிலங்களிலும் சட்டப்பேரவை தேர்தலுக்கான முன் தயாரிப்பு பணிகள் மற்றும் தேர்தல் அட்டவணையை இறுதி செய்வது குறித்து சுனில் அரோரா தலைமையில், டெல்லியில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.  காலை 11 மணியளவில் நடைபெறும் இந்த கூட்டத்தில், நாடு முழுவதும், கொரோனா அச்சம் இன்னும் விலகாத நிலையில், தேர்தலை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.

எந்தெந்த மாநிலங்களில் எத்தனை கட்டங்களாக தேர்தல் நடத்துவது, பதற்றமான வாக்குச்சாவடிகள், தேர்தல் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube