திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து தொடர்பாக விளக்கம் அளித்த தேர்தல் ஆணையம்…!!

திருவாரூர் தொகுதியில் 28ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த சூழலில் கஜா புயல் நிவாராணப் பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதால் இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்ததையடுத்து, திருவாரூர் ஆட்சியர் நிர்மல்ராஜ் நடத்திய கூட்டத்திலும் இதே கருத்து வலியுறுத்தின. இதனால் இடைத்தேர்தலை ரத்து செய்வதாக அறிவித்த  தலைமை தேர்தல் ஆணையம்  கஜா புயல் நிவாரணப் பணிகளை சுட்டிக்காட்டி இடைத்தேர்தலை ரத்து செய்யப்பட்டுள்ளதாக  தேர்தல் ஆணையம் விளக்கமளித்தது . கஜா புயல் பாதிப்புகள் இருப்பதால் வருகின்ற  ஏப்ரல் வரை இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என்று கூறியுள்ள தேர்தல் ஆணையம் திருவாரூரில்  சுமூக நிலை திரும்பியவுடன் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment