7 கட்ட மக்களவை தேர்தல் : இன்றுடன் பரப்புரை ஓய்ந்தது

இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறவுள்ளது.இதில் 6-கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.இதுவரை மொத்தம் 483 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றுள்ளது.

7 ஆம் கட்ட மக்களவை தேர்தல் நடக்கும் 8 மாநிலங்களில் 59 தொகுதிகளில் நடைபெறுகிறது.ஆனால் மேற்குவங்க மாநிலத்தில் வன்முறை ஏற்பட்டதால் அங்கு உள்ள 9 தொகுதிகளுக்கு மட்டும் நேற்று இரவு 10 மணியுடன் பரப்புரை முடிந்தது.மீதமுள்ள 50 தொகுதிகளுக்கான தேர்தல் பிரச்சாரங்கள் இன்றுடன் முடிவடைந்துள்ளது .

தேர்தல் நடைபெறும் மாநிலங்கள்:

  • உத்திர பிரதேசம்-13 தொகுதிகள்
  • பஞ்சாப் -13 தொகுதிகள்
  • மேற்குவங்கம் -9 தொகுதிகள்
  • மத்திய பிரதேசம் -8 தொகுதிகள்
  • பீகார் -8 தொகுதிகள்
  • இமாச்சல பிரதேசம்-4 தொகுதிகள்
  • ஜார்கண்ட் -3 தொகுதிகள்
  • சத்தீஸ்கர்-1 தொகுதி

 

 

Leave a Comment