எட்டு ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்.! தமிழக அரசு அதிரடி உத்தரவு.!

  • தமிழகத்தில் உள்ள எட்டு ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.
  • இந்த அறிவிப்பில் தொழில்நுட்பத்துறை செயலாளர் சந்தோஷ் பாபு, கைவினைத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுபோன்று மீதமுள்ள ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள எட்டு ஐஏஎஸ் அதிகாரிகள் பணி மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவுட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், அபூர்வா ஐஏஎஸ், உயர்க்கல்வித்துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். உயர் கல்வித்துறைச் செயலாளராக இருந்த மங்கத்ராம் சர்மா, ஆவணக் காப்பகங்கள் ஆணையர் பதவிக்கு மாற்றப்பட்டுள்ளனர். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை இணைச்செயலாளராக டி.மணிகண்டனும், அருங்காட்சியகங்கள் துறை ஆணையராக எம்.எஸ்.சண்முகமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குநராக கே.பி.கார்த்திகேயனும், தொழில் வழிகாட்டி அமைப்பின் நிர்வாக இயக்குநராக அனீஷ் சேகரும் மாற்றப்பட்டுள்ளனர். தகவல் தொழில்நுட்பத்துறை முதன்மைச் செயலாளராக இருக்கும் சந்தோஷ்பாபு, தமிழ்நாடு கைவினைகள் மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், தமிழ்நாடு ஃபைர்நெட் கழகத்தின் துணை செயலாளராக ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்