இன்றயை முட்டை விலை..!

இன்றயை முட்டை விலை..!

நாமக்கல்லில் முட்டை விலை நேற்று விலையிலிருந்து மாற்றமின்றி 3.80 காசுகளாக விற்பனையாகிறது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, மேலும் கொரோனா வைரஸ் ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம் என்று கூறலாம் , ஆம் 1 ரூபாய்க்கும் கீழ் குறைந்து மிகவும் அதிகளவில் சீப்பாக குப்பைகளிலும் கொட்டப்பட்டது.

இதற்கு பின் வேகமாக முட்டை விலை உயர்ந்து மற்றும் குறைந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் மருத்துவா் பி.செல்வராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முட்டை விற்பனை சீராக உள்ளது, மேலும் மற்ற மாவட்டங்களிலும் விலை தொடர்ந்து உயர்கிறது, அதனால் நாமக்கல் மாவட்டத்திலும் முட்டை விலை உயர்த்த முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் இன்று ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை நேற்று விலையிலிருந்து மாற்றமின்றி ரூ. 3.80 காசுகளாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube