9 வயது சிறுமிக்கு ஆபாச வீடியோவை காட்டி பாலியல் தொந்தரவு கொடுத்த தலைமையாசிரியர் கைது.
உத்தரபிரதேசத்தின் சீதாபூரில் உள்ள ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர், 4-ஆம் வகுப்பு பயிலும் சிறுமிக்கு ஆபாச வீடியோ கிளிப்பைக் காட்டி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனையடுத்து, இதுகுறித்து சிறுமி தனது தந்தையிடம் கூறியுள்ளார். சிறுமியின் தந்தை இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் படி, தனது மகள் 9 வயது சிறுமி. நான்காம் வகுப்பு படிக்கும் மாணவி. இவர் சித்தாப்பூர் கோண்ட்லாமாவ் தொகுதியில் உள்ள பள்ளிக்கு சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கூறியுள்ளார். தலைமை ஆசிரியர் பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு அறைக்கு சிறுமியை அழைத்து சென்றுள்ளார். அங்கு அவர் ஒரு ஆபாச வீடியோவை காட்டி உள்ளார். சிறுமி அதற்கு எதிர்ப்பு தெரிவித்த போது உடனடியாக அவர் அறையின் உள்ளே இருந்து கதவை பூட்டியுள்ளார்.
பின் வீடு திருப்பிய சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை தனது தந்தையிடம் கூறினார். சம்பவம் தொடர்பாக சிறுமியின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் தலைமை ஆசிரியர் மீது பலாத்கார வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் குற்றம்சாட்டப்பட்டவர் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், அவர் இதற்கு முன்பும் இதைப் போன்ற செயல்களில் ஈடுபட்டு இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தகவல் அளித்துள்ளனர்.
Heat wave: இந்தியாவிலேயே அதிகப்பட்ச வெப்பநிலை பதிவான மாவட்டங்களில் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம் 3ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக ஆந்திர மாநிலம் அனந்த்பூரில் 110.3 டிகிரி…
LokSabha Elections 2024: மக்களவை 2ஆம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் ஓய்கிறது. 2ஆம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் (ஏப்ரல் 24) முடிவடைகிறது. கேரளா,…
Summer Holiday: தமிழகத்தில் இன்று முதல் அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது. 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முன்னதாக நடந்து…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், குஜராத் அணியும் மோதுகிறது. ஐபிஎல் தொடரில் இன்றைய 40-தாவது போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ்அணியும், குஜராத் டைட்டன்ஸ்…
IPL2024: லக்னோ அணி 19.3 ஓவரில் 4 விக்கெட்டைகளை இழந்து 213 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின்…
Rutruaj Gaikwad : இன்றைய போட்டியில் வழக்கமாக களமிறங்கும் ரச்சின் ரவீந்திரா இடம்பெறாததற்கு ருதுராஜ் காரணம் கூறி இருந்தார். ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் சென்னை அணியும், லக்னோ…