சென்னையில் 11,12-ம் வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் பணி தொடங்காது!

சென்னையில் 11,12-ம் வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் பணி தொடங்காது.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில், இதுவரை இந்த கொரோனா வைரஸால், 14, 753 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 9,364 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், சென்னையில் 11,12-ம் வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் பணி 27-ம் தேதி தொடங்காது என தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. சென்னையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், சென்னை தவிர, மற்ற மாவட்டங்களில் திட்டமிட்டபடி 27-ம் தேதி விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.