சதுரங்க வேட்டை பட வசனத்தை தனது பிரச்சாரத்திற்கு பயன்படுத்திக்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

வேலூர் மக்களவை தேர்தல் ரத்து செய்யப்பட்டு அண்மையில் மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டு, நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ளது .

இந்த தேர்தலில் அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகமும், திமுக சார்பில் கதிர் ஆனந்தும், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி என பலர் போட்டியிடுகின்றனர்.

தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைவதால், இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் அந்தந்த கட்சி தலைவர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

இறுதி கட்ட பிரச்சாரத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ‘ திமுக மக்களை எப்படி ஏமாற்றலாம் என்பதில் கைதேர்ந்தவர்கள். எதனை கூறினால் மக்கள் ஏமாறுவார்கள் என அவர்களுக்கு நன்றாகவே தெரியும். சதுரங்கவேட்டை படம் போல ஒருவரை ஏமாற்ற மக்களிடம்  திமுகஆசை வார்த்தைகளை கூறி ஏமாற்றி வெற்றி பெற்றுவிட்டார்கள் அதே போல ஆசை வார்த்தைகளை கூறி ஏமாற்ற பார்ப்பார்கள் என திமுக மீதான தனது விமர்சனத்தை காட்டமாக முன்வைத்தார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.