அசாம் எண்ணெய் கிணற்றில் சுற்று சூழல் பாதிப்பு மதிப்பீடு நடக்கிறது!

அசாம் பகுதியிலுள்ள எண்ணெய் கிணற்றில் சுற்றுசூழல் பாதிப்பு மதிப்பீடு நடைபெற்று வருகிறது.

இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள மாநிலங்களில் ஒன்றான அசாம் பகுதியில் எரிவாயு கிணறுகளில் கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக அங்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் தற்போது சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு அசாம் பகுதியில் உள்ள எண்ணெய் கிணறுகளில் நடைபெற்று வருகிறது.

இதனால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அங்கிருந்து இடம் பெயர்ந்தன. ஒன்பதாம் தேதி ஏற்பட்ட இந்த தீ விபத்து காரணமாக ஏற்பட்ட குப்பைகள் அங்கிருந்து அகற்றப்பட்டன என்ற தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்நிலையில் அந்த எல்லைக்குள் நுழைவதற்கான உத்தரவுகள் முற்றிலும் நீக்கப்பட்டு இருந்த நிலையில் அது புதன்கிழமை மீண்டும் வழக்கம் போல உள்ளே செல்லலாம் என்று அனுமதிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது அந்த பகுதியில் எவ்வளவு பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது என மதிப்பீடு நடந்து வருகிறது.

author avatar
Rebekal