அசோக் லவாசா புகார் எதிரொலி : ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும்-தேர்தல் ஆணையம்

இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு தேர்தல் ஆணையர் அசோக் லவாசா ஒரு கடிதம் எழுதினார் .அதில் அவர் மோடி மற்றும் அமித்ஷா மீதான தேர்தல் விதிமீறல்கள் குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை ,எனவே நான் இனி எந்த கூட்டத்திலும் பங்கேற்க போவதில்லை என்று தெரிவித்தார்.

இந்நிலையில் அசோக் லவாசாவின்  கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு ஓன்று எடுக்கப்பட்டுள்ளது.அதில்,தேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment